• Apr 26 2024

இப்படி மனசில நினைச்சால் எப்படி ஹிட்டாகும்- நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்விக்கு இது தான் காரணமா?-வடிவேலுவை பொளந்துகட்டிய நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேலு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் அந்த பிரச்சினைகள் எல்லாம் தற்பொழுது முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் நடித்து வருகின்றார்.

 அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது.இப்படத்தை சுராஜ் இயக்கியிருந்ததோடு லைகா நிறுவனம் இப்படத்தை் தயாரித்து இருந்தது.இப்படத்தில் வடிவேலுடன் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், மாறன், குக் வித் கோமாளி ஷிவாங்கி என மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது. 


சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது.இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து வடிவேலு உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். 

அதில் அவர் பேசியதாவது : “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததை பார்க்கும்போது விதி தன் வேலையை கரெக்டா தான் செஞ்சிருக்குனு நினைக்க தோன்றுகிறது.


நான் வடிவேலு உடன் படங்களில் நடித்தபோதெல்லாம், அவர் நன்றாக வர வேண்டும், அந்த காமெடி பேசப்பட வேண்டும் என்று தான் நடிப்போம். ஆனால் இப்போ உள்ள நடிகர்கள் எல்லாம் தான் நன்றாக வரணும் அப்படிங்குற எண்ணத்தில் தான் வடிவேலு உடன் நடித்தார்கள். அதுவே அப்படத்தின் தோல்விக்கு காரணம். 

நாம நடிச்சதை தான் மக்கள் பார்க்கணும் அப்படிங்குற கட்டாயம் கிடையாது. பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும், எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கி எறியக்கூடிய மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நல்ல படங்கள் வந்தால் அதனை ரசிக்கிறார்கள்” என முத்துக்காளை கூறி உள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement