• May 06 2024

கண்ணீருடன் வெளியேறிய ரச்சிதா! வைரலாகும் விக்ரமனின் Emotional வார்த்தை

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் தற்போது பிக் பாஸ்  6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையில் அனைத்து போட்டியாளர்களும் உள்ளது.



 Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் பல பிரச்சினைகள்  இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சுவாரிசயமாகவும் சென்றிருந்தது.


இதனை அடுத்து  BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் இருப்பதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தன.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். அவர் வெளியேறியதும் பிக் பாஸ் வீட்டில் அவருக்கு மிகவும் நெருங்கிய போட்டியாளரான ஷிவின் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருந்த விஷயம், பலரையும் மனம் உருகி கண் கலங்க வைத்திருந்தது.


மேலும், ரச்சிதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சமயத்தில் அதிகம் கலங்கி போயிருந்தார். இந்த நிலையில், ரச்சிதா கிளம்பும் நேரத்தில் அவரிடம் விக்ரமன் சொன்ன விஷயமும், அதற்கு ரச்சிதாவின் பதிலும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

"உங்க உணவுக்கு நன்றி" என விக்ரமன் ரச்சிதாவிடம் கூற, "Atleast நான் போகும் போது நீங்க எல்லாரும் என் மேல வச்சிருக்குற Opinion மாறி இருக்குன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. விக்ரமன் அப்ப சொன்ன வார்த்தைகள் எல்லாம் இப்போ எனக்கு எனக்கு 'அப்பாடா, நம்ம இந்த வீட்ல இருக்கிறதுக்கு தகுதி உள்ள ஆள் அப்படின்னு நினைக்குறாங்களே'ன்னு இருந்துச்சு. நன்றி" என்று கண்ணீர் மல்க ரச்சிதா தெரிவித்திருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement