• Apr 26 2024

'ஏறி மிதிக்கனும்னு சொன்னேன், நிஜமாவே ஏறி மிதிச்சுட்டான்” - வரலட்சுமி குறித்து உண்மையை போட்டுடைத்த இயக்குநர் பாலா

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த  'போடா போடி' படத்தில்  கதாநாயாகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் சினிமாதுறையில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் சரத்குமாரின் மகளாவார். 

அவர் தொடர்ந்து தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்து அவர் பெருமளவில் பிரபலமானார். தாரை தப்பட்டை படம் தமிழ் சினிமாவில் இவருக்கென அடையாளத்தை கொடுத்தது என்றே சொல்ல்லாம்.நடிகை வரலட்சுமி தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

அவார்ட் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் நடிகை வரலட்சுமி குறித்து இயக்குநர் பாலா கூறுகையில் ,''ஒரு படத்தில் பெண்ணை ஏறி மிதின்னு சத்தமா சொன்னதும் நிஜமாகவே மிதிச்சிட்டான். அப்புறம் 2,3 ரேக் எல்லாம் போனிச்சு.ஆனா முதல் தடவ ஏறி மிதிச்சப்போ  வரலட்சுமி கழுத்தில க்ராக் ஆகிடிச்சு.அத வெளில காமிச்சிக்கவே இல்ல. ஊருக்கு போய்ட்டு வந்து எஸ்ரே ஒன்னு காமிச்சா அதில தெளிவா அந்த அடையாளம் தெரிஞ்சிச்சு.புள்ளைக்கு முகம் எல்லாம் வாடி போச்சு.நிஜமாவே ரொம்ப கஷ்டப்பாட்டுடன் சார் அப்பிடின்னு சொல்லிச்சு,

தன்னை வருத்தி புழைக்கிறது அப்டின்னுற நாயகி நம்மக்கிட்ட இருக்கிறா,இதுக்கு தமிழ் சினிமா பெருமைப் படோணும்,நான் work பண்ண கதாநாயகில ரொம்ப,ரொம்ப ஹார்ட் வேர்க்கான நடிகை  வரலட்சுமி தான்.அதுக்கு உதாரணம் சொல்லணும்ல அதான் சொன்னன்'' .என கூறினார்.



Advertisement

Advertisement

Advertisement