• May 20 2024

கேள்ஃபிரண்ட் என்று சொல்லாமல் மனைவி என்று சொல்லிவிட்டேன் இதில என்ன தப்பு- பப்லு கொடுத்த அதிரடியான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் தான் பப்லு என்று அழைக்கப்படும் ப்ரித்விராஜ்.அதே போல சின்னத்திரையில் மர்மதேசன் என்னும் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து  வாணி ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த இவர், தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார்.

இவர் இண்மையில் மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்னை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இதுகுறித்து தமது பெண் தோழி ஷீதலுடன் இணைந்து பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது


 “எனக்கு 56 வயதாகிறது. ஷீத்தலுக்கு 24 வயதாகிறது. இந்த ஒரு விஷயத்தை தாண்டி நாங்கள் என்ன தப்பு செய்தோம்? நான் எவ்வளவோ நலத்திட்டங்களை செய்கிறேன். அது பற்றி யாரும் பேசுவதில்லை.

இப்படி பேசுவது வாடிக்கையாகிவிட்டது. நேரடியாக அநாகரிகமாக பேசுபவர்களுக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. சிலர் இந்த வயசுல இதெல்லாம் கேட்குதா என்று கேட்கிறார்கள். அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது? அவர்களுக்கு தகுந்த பதில்தான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

சகோதரியின் திருமணத்துக்கு செல்லும் பொழுது நான் ஷீத்தலை கேர்ள் ஃபிரண்ட் என்று சொல்லாமல் மனைவி என்று சொல்லிவிட்டேன். அதில்தான் அனைத்தும் தொடங்கியது. மற்றபடி என் வாழ்க்கை பற்றி பேசுபவர்கள் யாருக்குமே என்னுடைய ஒருநாள் வாழ்க்கை பற்றி தெரியாது. பிக் பாஸ் காஜல் பசுபதி என் குறித்த விஷயங்களை பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். அப்போதுதான் இந்த விஷயம் பூதாகரமாகி வெளியில் பேசப்பட்டு கொண்டிருப்பதை நான் அறிந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஒரு நிகழ்வில் தம்முடைய தயாருடனான நெருடல்கள் குறித்து பேசியதை பேசுபொருளாக்கிவிட்டார்கள் என்று பப்லு கூற, இதனிடையே பேசிய ஷீத்தல், “பப்லுவை பொருத்தவரை அவர் குழந்தை மாதிரி” என கூறி தான் பேச தொடங்கினார். அதில், “பப்லுவின் குழந்தை சிறப்பு குழந்தையாக இல்லை என்றால் இப்படி ஒரு முடிவை எடுப்பாரா?” என்று கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு எந்த கரிசனமும் கிடையாது, இந்த கேள்விக்கு முதலில் எதற்காக பதில் சொல்ல வேண்டும்? அவர்களையே கேட்க வேண்டும் அந்த கேள்விகளை. ” என கூறினார்.

மேலும் பேசிய ஷீத்தல், “இன்னும் பலர் கேட்கும்பொழுது பிருத்திவிராஜின் வயது உள்ளிட்ட விஷயங்களுடன் என்னை ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் 5 நிமிடத்தில் எந்த கேள்வியும் சம்மதமும் கேட்காமல் நடக்கும் அரேஞ்ச் திருமணத்தை விடவும், எவ்வளவோ புரிதலுடன்தான் உறவில் இருக்கிறோம். ஆனால் இது பற்றி எதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை” என  குறிப்பிட்டவர். “வயது பெறும் நம்பர் தான், வயதானால் எனக்கும் தலைமுடி நரைக்கும். நானும் மூப்படைவேன்” என்று குறிப்பிட்டார்.இந்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement