• Sep 19 2024

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் அவரது தன்னடக்கம் தான் சூப்பர் - புகழ்ந்து தள்ளிய பிரபல கன்னட நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நேதாஜி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கிச்சா சுதிப்.கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல முக்கிய கதாபாத்திரங்களில் பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் .இவர் தமிழில் நான் ஈ திரைப்படம் மூலம் பிரபல்யமானார். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா.

இத்திரைப்படத்தை அனூப் பந்தாரி இயக்கியுள்ளார்.நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து விக்ராந்த் ரோனா படத்தை தயாரித்துள்ளனர்.பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிளிம்ப் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இப்படத்திற்கு லோகநாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பேன் இந்தியத் திரைப்படமாக ஜூலை 28ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.இத்திரைப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டுள்ள மிரட்டலாக வெளியாகியுள்ள இந்த டிரைலர் இணையதளத்தில் வைரலாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சுதீப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அப்போது ஒரு செய்தியாளர் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமா உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கன்னட சினிமா வளர்ச்சி பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்.அதற்கு சூப்பர் என்பது போல சைகையால் அசைத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான் அவருடைய படங்களை பார்த்து மிகவும் பிரமித்து இருக்கிறேன். ரஜினியை நேரில் பார்த்த போது அவ்வளவு பெரிய ஸ்டார் என்று இல்லாமல் மிகவும் தன்னடக்கத்துடன் இருந்தார். அவரின் இமாலய வளர்ச்சிக்கு அந்த தன்னடக்கம் தான் காரணம். அது என்னை மிகவும் கவர்ந்ததால் முன்பைவிட தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.

"விக்ராந்த் ரோணா" திரைப்படத்தின் போலீசாக நடித்து இருக்கிறீர்கள். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என நாயகன் ஸ்டைலில் ஒரு செய்தியாளர் கேட்க நீங்கள் போலீசை பற்றி என்ன நினைக்கிறீர்கள் சிக்னலில் ஒரு போலீஸ் உங்களைப் பிடித்து எதுவுமே வாங்காமல் அனுப்பி விட்டால் நல்லவன், ஏதாவது வாங்கிக்கொண்டு அனுப்பினால் கெட்டவன், அப்படித்தான் இதுவும் படத்தை பார்த்து நான் நல்ல போலீஸா கெட்ட போலீஸா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூலாக பதில் அளித்துள்ளார் நடிகர் கிச்சா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement