• Apr 01 2025

வன்மம் நிறைந்த கோபியின் ஈனச் செயல்! காணாமல் போகும் மினிஸ்டர்? அடுத்து நிகழப்போவது என்ன?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் ஆரம்பிப்பதற்காக ஏற்பாடுகளை  எல்லாம் பாக்கியா மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து அங்கு ஜெனியும் குழந்தையும் காரில் வந்திறங்க பாக்கியா அவரை உள்ளே அழைத்து செல்கிறார்.

மறுபக்கம், என்னையா உன் ரெஸ்டாரன்ட் வேலைக்கு கூப்பிடுற என்ற கோபத்தில், கோபி மினிஸ்டரை ரெஸ்டாரன்ட் ஓப்பனிங்க்கு வரவிடாமல் வேறு ஒரு ஸ்கூல் பங்க்ஷன்க்கு செல்ல வைக்க பணம் கொடுத்து ஆட்களை செட் பண்ணுகிறார்.


இன்னொரு பக்கம் நேரமாகிறது இன்னும் மினிஸ்டரை காணவில்லை என ஈஸ்வரியும் பாக்கியாவும் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே மினிஸ்டர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டை ஓப்பன் பண்ண வருவாரா? இல்லை கோபி செட் பண்ணிய இடத்திற்கு செல்வாரா? பாக்கியா இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement