• Mar 09 2026

குழந்தையை அபோஷன் பண்ண சொன்ன கோபி! ராதிகா கேட்ட கேள்வி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கோபியும் ராதிகாவும் கதைத்துக் கொண்டிருக்க, குழந்தை விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்கீங்க என்று ராதிகா கேட்க, அதுதான் என்ன செய்வதென்று தெரியல பேபி. நினைச்சா தலையெல்லாம் சுத்துது என்னமோ பண்ணுது என கோபி சொல்லுகிறார்.

அது மட்டும் இன்றி தயங்கி தயங்கி குழந்தையை அபோஷன் பண்ணிடலாம் என சொல்ல, ராதிகா ஷாக் ஆகிறார். 


ஆனாலும் அதன் பிறகு பாக்கியா கர்ப்பமான போது நீங்க என்ன செய்தீர்கள் என கேட்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என்று ஆக்சன் உடன் சொல்லுகிறார் கோபி. 

இதை கேட்ட ராதிகா, பாக்கியா கர்ப்பமான போது சந்தோசப்பட்டிங்க ஆனா நான் கர்ப்பமான போது அபோஷன் பண்ண சொல்லுறீங்களா என்று கேட்டு  அவருக்கு அடிக்கிறார். இது தான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ.




Advertisement

Advertisement