• Apr 26 2024

அண்ணன் போட்டிக்கு வருவார் என்று எதிர்பார்க்கல- மூர்த்தியை கேலி பண்ணிய கண்ணன்- மீனா போட்ட கண்டிஷன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருககம் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மீனா, கர்ப்பமாக இருக்கும் மூவரையும் விழுந்து விழுந்து கவனிக்கின்றார். அது மட்டுமல்லாமல் தனத்தின் பிள்ளையையும் தன்னுடைய மகளையும் கூட பார்த்துக் கொள்வதோடு அவர்களை தொட்டிலில் போட்டு உறங்கவும் வைக்கின்றார்.பின்னர் ஜுவாவை போன் செய்து வர வைக்கிறாார்.


ஜுவா வந்ததும் எப்பிடிடா எல்லாரும் ஒரே டைம்ல கர்ப்பமானாங்க.நாம தானே ரூம்ல  இருக்கிறோம். அவங்க எல்லாரையும் அவங்க புருஷன் கவனமா பார்த்துக்கிறாங்க எனக்கும் நீ என்னை பார்த்துக்கணும் போல இருக்கு. இதுக்காகவே நானும் கர்ப்பமாகணும் போல இருக்கு என்றெல்லாம் கூறுகின்றார்.


பின்னர் இரவு ஆனதும் ஜுவாவும் மூர்த்தியும் இருந்து கடைக்கணக்கு குறித்து பார்த்திட்டு இருக்கும் போது அங்கு வரும் கண்ணன் மூர்த்தியை கிண்டலடிக்கின்றார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பாகி மூர்த்தி உள்ளே சென்று விடுகின்றார். தொடர்ந்து மீனா, தனத்தினை வைத்து நக்கலடித்துக் கொண்டிருக்கின்றார்.


மீனா கதை சொல்ல வர ஒவ்வொருத்தராக மாறி மாறி வாந்தி எடுக்கின்றனர். இதனால் மீனா எல்லோரும் ஒரேடியா குழந்தை பெத்துக்காதீங்க.என்னால பார்க்க முடியாது கொஞ்சம் இடைவெளி விட்டு பெத்துக் கோங்க என்று கூறுகின்றார்.இதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்கின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement