• Jan 26 2026

டைட்டிலுக்கு டாடா சொல்லிட்டு பணப்பெட்டியை அலேக்கா தூக்கிய போட்டியாளர்.. யார் தெரியுமா.?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் 9ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்திலிருந்து பல திருப்பங்களையும், சர்ச்சைகளையும், உணர்ச்சிபூர்வமான தருணங்களையும் கடந்து வந்த இந்த சீசன், இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது. 

குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள பணப்பெட்டி (Money Box) டாஸ்க் இந்த சீசனின் முக்கிய ஹைலைட்டாக மாறியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் வழக்கமாக இறுதி வாரங்களுக்கு முன்பு நடத்தப்படும் பணப்பெட்டி டாஸ்க், இந்த சீசனிலும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பணப்பெட்டியும் போட்டியாளர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.


அந்த வரிசையில், 18 லட்சம் ரூபாய் கொண்ட பணப்பெட்டி வீட்டுக்குள் வந்த போது, ரசிகர்கள் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த முடிவு, வீட்டிற்குள் இருந்த மற்ற போட்டியாளர்களை மட்டுமல்லாது, வெளியே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏனெனில், இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் கானா வினோத் தனது தனித்துவமான நடத்தை, நேர்மையான விளையாட்டு மற்றும் உணர்ச்சிபூர்வமான அணுகுமுறையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்திருந்தார். பலரும் அவரை இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகப் பார்த்தனர். அத்துடன் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement