• May 20 2024

தென்காசியில் போடப்படும் பெரிய கிராம செட்-தனுஷின் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகர் தனுஷ் தனது படங்கள் மூலம் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார்.இவ்வாறுஇருக்கையில்  திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.இதனிடையே அவரது நானே வருவேன், வாத்தி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.இதனை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் தனுஷின் ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் என அடுத்தடுத்த 4 படங்கள் ஓடிடியில் வெளியாகின.இதனால் ரசிகர்கள் பலரும் தமது தலைவனை திரையரங்குகளில் கொண்டாட வாய்ப்பளிக்கவில்லை. இதையடுத்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் அவரது திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

அத்தோடு தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் கூட்டணி முன்னதாக யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட படங்களில் இணைந்திருந்த நிலையில், இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை இந்தக் கூட்டணி தற்போது பூர்த்தி செய்து சிறப்பான விமர்சனங்களையும் அதிக  வசூலையும் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நானே வருவேன் மற்றும் வாத்தி படங்கள் ரிலீசாகவுள்ளன. மேலும்  இந்தப் படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. நானே வருவேன் படம் வரும் 29ம் தேதி ரிலீசாகுவுள்ள நிலையில், அடுத்ததாக வாத்தி படம் டிசம்பர் 2ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்தப் படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். 1930களில் நடைபெறும் இந்தப் படத்தின் கதையை சிறப்பாக திட்டமிட்டுள்ளார் அருண் மாதேஸ்வரன். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களின் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் கமிட்டாகியுள்ளனர். இவ்வாறுஇருக்கயைில்  இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சிறப்பாக போடப்பட்டுள்ளது. இந்தப் பூஜையின் புகைப்படங்கள் தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளன.


விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ள நிலையில், தென்காசியில் இந்தப் படத்திற்கான பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருகிறது.மேலும் இது பெரிய அளவிலான கிராமத்திற்கான செட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செட்டின் மாதிரிகள் தற்போது போடப்பட்டுள்ள பூஜையிலும் வைக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.



Advertisement

Advertisement