• Jul 07 2024

ஒரே நேரத்தில் இப்படியா நடக்கனும்-சீரியல் நடிகரால் கவலையில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆபீஸ் சீரியல் மூலம்  ரசிகர் மத்தியில் அறிமுகமான விஷ்ணு சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரெட்  கதாநாயகனாக வலம் வருகிறார். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம் என்று தான் கூறவேண்டும்.

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழ் பக்கம் சென்றவர் சத்யா சீரியல் மூலம் ஹீரோவானர். இவருக்கு சத்யா சீரியல் மூலம் அமுல் பேபி என்ற செல்ல பெயரும் கிடைத்தது. 

சத்யா சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த சீரியலில் ஆயிஷா - விஷ்ணு ஜோடிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உருவானது.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யா சீரியல் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது அந்த சீரியலின் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது. 



முதல் சீசன் போலவே 2-வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் திடீரென்று நடுவில் சீரியல் டி.ஆர்.பியில் அடி வாங்கியது. எனினும் தற்போது கதைப்படி ரவுடி பேபி கர்ப்பமாக இருக்கிறார்.இந்நிலையில் சத்யா 2 சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வருவதாக இணையத்தில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.



 இதனால் அமுல் பேபி - ரவுடி பேபி ரசிகர்கள்  மிகவும் சோகத்தில் உள்ளனர்.இது ஒருபுறம் இருக்க விஷ்ணு கலர்ஸ் தமிழில் நடித்து வரும் இது சொல்ல மறந்த கதை சீரியலும் க்ளைமேக்ஸை நெருங்கி விட்டது. 

விஷ்ணு நடிக்கும் 2 சீரியல்களும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.அதே நேரம் விஷ்ணு பற்றி மற்றொரு தகவலும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்துள்ளன. அதாவது பிக் பாஸ் சீசன் 6ல் விஷ்ணு போட்டியாளராக களம் இறங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement