• Sep 20 2024

நயன்தாராப் பற்றி செல்வராகவன் சொல்லும் போதே நம்பாத தனுஷ்- அட இவர் சொன்னதும் சரி தான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்பொழுது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.இது தவிர பீஸ்ட் மற்றும் சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தனுஷ் தயாரித்து சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த எதிர் நீச்சல் திரைப்படத்தை செல்வராகவனிடம் போட்டுக் காண்பித்துள்ளார் .படத்தை பார்த்துவிட்டு,"அடுத்த பெரிய ஹீரோ இந்தப் பையன்தான்" என்று செல்வா கூறினாராம். அவர் கூறியது போலவே இன்று சிவ கார்த்திகேயனின் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.

அதே போல இயக்குநர் ஹரி இயக்கத்தில், நடிகர் சரத் குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை நயன்தாராவை, அந்தப் படம் வெளியானபோது,"இந்த நடிகை எதிர்காலத்தில் பெரிதாக சாதிப்பார்" என்று பலரிடமும் சொன்னாராம் செல்வராகவன். அவர் கூறியபோது தனுஷ் கூட நம்பவில்லையாம். ஆனால் செல்வராகவன் கூறியது போல நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தனித்து நடித்து வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.

அண்ணன் சொல்லியதை நம்பாத அதே தனுஷ் தான் பிற்காலத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாராவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். வளர்ந்து வந்த விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடிக்கிறார் என்ற செய்திதான் அப்படத்தின் பெரிய புரமோஷனாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement