• Sep 19 2024

சென்னை காவல் ஆணையரகத்தில் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலிலும் காமெடி வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

இவர் பத்திரிகை ஆசிரியராகவும் கடமையாற்றி வருவதோடு யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.

தனது யூட்யூப் சேனலில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து ரகசியங்கள், சினிமா அப்டேட்டுகள், நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் என அனைத்தையும் கூறி வருகிறார். மேலும் அவரது வீடியோவை காண்பதற்கு என்றே ரசிகர் கூட்டமும் உள்ளது என்று தான் கூற வேண்டும்.

மேலும் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் யூட்யூப் சேனல் மூலமாகவே அதிகம் சம்பாதிப்பதாக கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவர் ஆபாசமாக பேசுவதற்கு எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை பயில்வான் ரங்கநாதன். தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பெண்களை பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் சேனல்களில் அவதூறாக பேசுவதாக கூறி திரைப்பட தயாரிப்பளர் சங்கம், தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் ராஜன், இயக்குநர் திருமலை உள்ளிட்டோர் இணைந்து சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்த விசயம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement