• May 19 2024

அடடே 'PS-2' 300கோடி வசூல் செய்திட்டாம்... பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். 

அந்தவகையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் எனப் பலரும் நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


இதனையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. அந்தவகையில் முதல் 4 நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், 4 நாட்களுக்கு பின் வசூல் படிப்படியாக குறைய தொடங்கியது.


ஆனாலும் இப்படம் கடந்த 11 நாட்களில் ரூ. 300 கோடியை கடந்து வசூல் செய்துவிட்டது என நேற்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 ரூ. 3000 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது, பான் சாதனையை முறியடித்துள்ளது என பதிவு செய்துள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள்தங்களின் பதிவு கிண்டல் செய்வது போல் இருக்கிறது என கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement