பிரபு சாலமன் அஸ்வின் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'செம்பி'. இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் உருக்கமுடன் பேசி இருக்கின்றமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. ஏனெனில் ஏற்கனவே இவரின் முதல் திரைப்படம் ஆன 'என்ன சொல்லப் போகிறாய்' திரைப்படத்தில் இவர் எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது "படம் பிடிக்கல என்றால் நான் தூங்கிடுவேன். கிட்டத்தட்ட 40 கதை கேட்டிருப்பன். 40 கதையிலயும் நான் தூங்கிட்டேன்" என இயக்குநர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதனால் இவர் மீது நெகடிவ் கருத்துக்களை அனைவருக்கும் ஏற்படுத்தும் விதமாக பல மீம்ஸ்கள் உருவாகிவிட்டது.
இந்நிலையில் நெட்டிசன்கள் இப்ப வரைக்கும் இவர் 'என்ன சொல்லப் போகிறாய்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை நினைவுபடுத்தி கலாய்த்து வருகின்றனர். அந்தவகையில் செம்பி பட வெளியீட்டு விழாவில் இவர் ரொம்பவே தன்னடக்கத்துடன் பேசி இருக்கின்றார்.
அதாவது "நான் எல்லாம் படம் பன்னுறதே பெரிய பாக்கியம். நான் கனவிலே மட்டும் தான் நினைச்சிட்டு இருந்தேன். அது நிறைவேறிடிச்சு. எனக்கு முதலாவது படத்தைக் கொடுத்த ரவி சார்க்கு ரொம்ப நன்றி. கமல் சாரை நான் இதோட மூணாவது தடவை பாக்கிறேன்.
இது எல்லாம் கனவா நிஜமா என்று எனக்குத் தெரியல. அவர் பக்கத்தில் நிக்கிறதற்கே ஒரு பாக்கியம் வேண்டும். அவர் இருக்கும் போது இந்த மேடையில் நான் பேசுவது தகுதி இல்லை என்று நினைக்கிறேன்" என மிகவும் மனதை உருக்கும் வகையில் பேசியிருக்கின்றார்.
இதனைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் முதல் அவர் பேசியதையும், இப்போது அவர் பேசியதையும் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.
Listen News!