தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பினால் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தற்பொழுது இயக்குநர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குளில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று முன்தினம் வெளியான ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகவே உள்ளது.
இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ள நிலையில் சமந்தா ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு இப்படத்தின் டப்பிங் பணியை செய்திருக்கின்றார்.இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நிலையில் இவர் myositis என்கிற அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் விரைவில் இதிலிருந்து நலம்பெற்று திரும்பி வருவேன் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.
Listen News!