• Apr 16 2026

வளர்ப்பு நாய்க்கு துலாபார காணிக்கை கொடுத்த சர்ச்சைக்கு... முற்றுப்புள்ளி வைத்த டீனா.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் பாரம்பரிய மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஜாதாரா திருவிழா சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய சம்பவமாக மாறியுள்ளது. இந்த திருவிழாவின் போது, நடிகை டீனா, தனது வளர்ப்பு நாயை துலாபாரத்தில் அமர வைத்து, அதன் எடைக்கு ஏற்ப வெல்லம் (சக்கரை) காணிக்கையாக செலுத்திய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.


இந்த சம்பவம் வெளிவந்ததும், சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகின. குறிப்பாக, சிலர் இந்த செயல் பழங்குடியின மக்களின் நம்பிக்கைகள் மற்றும் மத வழிபாட்டு முறைகளை அவமதிப்பதாக உள்ளது என்று விமர்சனம் எழுப்பினர். இதனால், நடிகை டீனாவின் செயல் சர்ச்சையாக மாறி, இணையத்தில் விவாதத்துக்கு வழிவகுத்தது.

இந்த சர்ச்சை பெரிதாகிய நிலையில், நடிகை டீனா தற்போது இதுகுறித்து தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அவர் அதன்போது, “என் வளர்ப்பு நாய் உடல்நலக் குறைவு காரணமாக மிகுந்த பாதிப்பில் இருந்தது. அது குணமடைந்ததற்காக, நான் ஒரு நேர்த்திக்கடனாக இந்த துலாபாரத்தை செய்தேன். இதில் எந்த ஒரு சமூகத்தையும், நம்பிக்கையையும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.” என்று கூறியுள்ளார். 

மேலும் அவர்,“என்னுடைய இந்த செயல் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.”என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement