• May 20 2024

இனியாவால் கோபிக்கும் ராதிகாவிற்கும் இடையில் வெடிக்கும் சண்டை-பரபரப்புடன் வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இச் சீரியல் வங்காள மொழியில் வெளிவந்த ஸ்ரீமாயி சீரியலின் தமிழ் பதிப்பு என்று கூறப்படுகின்றது. 

இதில் கோபி பாக்கியாவை பிரிந்து ராதிகாவுடன் வாழ்ந்து வருகின்றார்.ராதிகாவுடன் தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில் பாக்கியாவுடன் சண்டை இட்டுக்கொண்டு கோபியுடன் போய்  இருக்கிறார் இனியா.இனியாவை போய் பார்த்துக்கொள்ளும் முகமாக தாத்தா ராமமூர்த்தியும் கோபியின் வீட்டில் போய் கோபியை கடுப்பேத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் இனியாவிடம் ராதிகா ஏன் நீ கோவ்வி குடிக்கவில்லை எனக்கேட்க அமைதியாக இருக்கின்றார் இனியா.அதன் பிறகு உன்னிடம் தான் கேட்கிறேன் என கோபமாக ராதிகா கேட்க, கோபமடைந்த இனியா....உங்க கூட பேசனும் எண்டு அவசியம் இல்லை..என முகத்தில் அடித்தாற்போல பேசி விடுகின்றார்.



அந்த நேரம் கோபி வந்து இனியாவிடம் என்னாச்சு எனக் கேட்க..என்கிட்ட கேள்விகேட்க இவங்க யாரு டாடி எனக் கேட்டதும் கோபி ராதிகாவிடம் நீ என்ன இனியாவிடம் கேட்டாய் என கேள்வி கேட்கின்றார்.

இதற்கு பதிலளித்த ராதிகா...ஏன் கோவ்வி குடிக்கவில்லை எனகேட்டேன்...எனக் கூறினார்.அதற்கு கோபி அவளுக்கு தான் கோவ்வி பிடிக்காது எண்டு தெரியாதா..? எனக் கேட்க..கோபமடைந்த ராதிகா, அவளுக்கு காவ்வி மட்டும் பிடிக்கவில்லை என்னையும் பிடிக்கவில்லை எனக் கோபமாக கத்தி விடுகின்றார்.



ஆமா..பிடிக்கவில்லை என கத்திய இனியா..கோபியிடம்..நான் முக்கியமா ..இல்லை.. இவங்க முக்கியமா எனக் கேட்க திருதிருவென முழிக்கின்றார் கோபி.இவ்வாறு இருக்கையில் கோபி ராதிகாவிடம் என்ன சொல்லப்போகின்றார் ராதிகவிற்கும் கோபிக்கும் சண்டை வருமா.. என ரசிகர்கள் பலரும் காத்துநிற்கிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement