• Apr 14 2025

தர்ஷனின் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்..!நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகிலும், பிக்பாஸ் ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகனை தாக்கியதாக எழுந்த புகாரினால் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது நெருங்கிய நண்பர்களும் தொடர்புபட்டுக் கொண்டனர்.


சமீபத்தில், கார் பார்க்கிங் விவகாரத்தில் தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுக் கொண்டது. இவ்வாக்குவாதம் வெறும் வார்த்தைகளில் முடிவதற்குப் பதிலாக, சூழ்நிலை கட்டுப்பாட்டை இழந்து வன்முறையில் முடிந்தது.

சம்பவம் தொடர்பான புகார் கிடைத்தவுடன் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் தற்பொழுது ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


அது என்னவென்றால், இவ்வழக்கில் கைதான தர்ன் மீது எந்தத் தவறும் இல்லை என்று பொலிஸார் தற்பொழுது தெரிவித்துள்ளதால் அவரை நீதிமன்றம் ஜாமீன் செய்துள்ளது. இத்தகவல் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement