• Apr 26 2024

வின்னர் அஜித்தா..? விஜய்யா..?.. ரெட் ஜெயிண்ட் மூவீஸ் போட்ட பரபரப்பு பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.


இவ்விரண்டு படங்களும் வெளியாகிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அத்தோடு இரண்டு படங்களும் வெளியாகி ஐந்து நாட்களாகும் நிலையில், தமிழகத்தில் 'துணிவு' திரைப்படம் இதுவரை 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வாரிசு திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உலக அளவில் 'துணிவு' திரைப்படம் மூன்றே நாட்களில் 100 கோடியை எட்டிய நிலையில், 'வாரிசு' திரைப்படமும் தற்போது 100 கோடியை எட்டி இருக்கின்றது. இதேபோன்று ஜனவரி 14ஆம் தேதி 'வாரிசு' திரைப்படம் தெலுங்கில் வெளியாகி டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, முதலுக்கு மோசமில்லாத வகையில் வசூல் சாதனை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.


மேலும் முதல் நாளே படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குநர் வம்சி ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே போல் 'துணிவு' திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால், விரைவில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக இரண்டு படங்களுக்குமே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'துணிவு' திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், ' வாரிசு' திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமானது, பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றினைப் போட்டுள்ளது.


அதாவது அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என நடுத்தரமாக தன்னுடைய பதிவை போட்டுள்ளது. இதனால் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவதோடு தற்போது சமூக வலைத்தளங்களிலும் இப்பதிவு பேசுபொருளாக மாறி இருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement