• Apr 28 2024

ராஷ்மிகா போன் செய்தால் மட்டும் தான் விஜய் தேவர்கொண்டா எடுப்பாரா?- உண்மையை உடைத்த பிரபல நடிகர்

stella / 5 months ago

Advertisement

Listen News!

2016ல் கிரிக் பார்ட்டி என்னும் கன்னட படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் ரஷ்மிகா மந்தனா. கன்னட படத்தில் நடித்து அறிமுகமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இரண்டு படங்களே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களும் எக்கச்சக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் தற்பொழுது  பாலிவுட் நடிகர் ரன்பீர் ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார். அந்த வகையில் அண்மையில் நடிகர் பாலகிருஷ்ணா, ரன்பீர், இயக்குனர் சந்தீப் ரெட்டி ஆகியோருடன் ஒரு ஷோவில் கலந்து கொண்டார.


எனவே அந்த ஷோவில் ராஷ்மிகா, விஜய் தேவர்கொண்டாவை காதலிப்பது குறித்து கூறியுள்ளனர். அதாவது விஜய் தேவர்கொண்டா வீட்டு மொட்டை மாடியில் தான் ரஷ்மிகாவை இயக்குனர் சந்தீப் ரெட்டி முதன்முதலில் பார்த்தாராம். மேலும் அர்ஜுன் ரெட்டி, அனிமல் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் பிடித்தது என சொல்லுங்க என கேட்டு ராஷ்மிகாவை தர்மசங்கடம் ஆக்கி இருக்கின்றனர்.

காதல் படமா இல்லை ரன்பீர் படமா? என தேர்வு செய்ய முடியாமல் ராஷ்மிகா அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் விஜய் தேவர்கொண்டாவுக்கு போன் செய்ய வேண்டும் என கூறப்பட்ட போது, வேறு யாரும் பண்ணாதீங்க, ராஷ்மிகா கால் பண்ணா தான் அவர் எடுப்பார் எனவும் கலாய்த்து இருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement