• May 05 2024

வெற்றிமாறன், சுந்தர் சி.. ரெண்டு பேர் படமும் வேண்டாம்.. கவின் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் இயக்கத்தில் உருவாக இருந்த படம் ஒன்றில் கவின் நடிக்க இருந்ததாகவும் அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த ’கலகலப்பு 3’ படத்தில் கவின் நடிக்க இருந்ததாகவும் ஆனால் இந்த இரண்டு படத்திலும் நடிப்பதில்லை என கவின் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான கவின் தற்போது தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் நடித்த ’டாடா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் நடித்து முடித்த ’ஸ்டார்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



இதனால் கவின் திரை உலக மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளதாகவும் அவர் ஒரு படத்திற்கு 5 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க கவினுக்கு வாய்ப்பு வந்ததாகவும், அவரிடம் கவின் ஐந்து கோடி ரூபாய்  சம்பளம் கேட்க வெற்றிமாறன் தரப்பிலிருந்து ஒரு கோடி மட்டுமே சம்பளம் தர முன்வந்ததாக தெரிகிறது. 

அதேபோல் ’கலகலப்பு 3’ படத்தில் நடிக்க கவின் 6 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் சுந்தர் சி தரப்பில் இருந்து ஒன்றரை கோடி மட்டுமே சம்பளம் தர முடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தான் வெற்றிமாறன் மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரது படங்களும் வேண்டாம் என்று முடிவு செய்த கவின் ஐந்து கோடிக்கு மேல் சம்பளம் கொடுப்பவர்களின் படத்தில் மட்டுமே நடிப்பேன் என அதிரடியாக முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

சினிமா என்பது காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் ஒரு துறை என்பதால் தற்போது மார்க்கெட் உள்ள போதே பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்திருப்பதாகவும் அதே நேரத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து அவர் நடித்து வருவதால் கண்டிப்பாக அவர் இன்னொரு சிவகார்த்திகேயனாக திரை உலகில் வருவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement