• May 21 2024

தன்னுடைய வருங்கால மனைவியுடன் சீரடி சாயி பாபா கோயிலுக்குச் சென்ற விக்னேஷ் சிவன்- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர் தான் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

முக்கோண காதலை வெளிப்படுத்தும் விதமாக வெளியாகிய இத்திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மேலும் தற்போது வரையில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் சீரடிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் சிவன் கண்மணியுடன் சீரடி சாயி பாபாவை சந்தித்து விட்டு வருவதாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement