• May 17 2024

நடிகை மஞ்சுவாரியாரின் உயிருக்கு ஆபத்து என்ற வதந்தியைப் பரப்பிய பிரபல இயக்குநர் கைது

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சுவாரியார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் சிறந்த வரவேற்பைப் பெற்றதோடு சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார்.

அத்தோடு இவர் மலையாள சினிமாவில் பிரபல நடிகரான திலீப் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். பின்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்வதோடு பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகின்றார்.

இந்நிலையில், பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து அதில், கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சணல் குமார் சசிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.அந்தப் புகாரில், தன் பெயருக்கு கேடு விளைவிக்கு வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement