• May 02 2024

சினிமாவை விட எனக்கு இது தான் முக்கியம், அதுக்கு பிறகு தான் எல்லாமே- உண்மையை போட்டுடைத்த ஜோதிகா

stella / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாலி என்னும் திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஜோதிகா. இதனைத் தொடர்ந்து, பல விஜய், அஜித்,ரஜினி,கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானர். பின்னர் நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்ததால் நடிப்பிலிருந்து விலகினார்.

தொடர்ந்து 36 வயதினிலே என்னும் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார். அதன்படி இறுதியாக,மம்முட்டியுன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்திருந்தார். அதில் "பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களுக்காக ரொம்பவே உழைக்கிறேன். கதாநாயகிகள் இந்த ஃபீல்டில் 10 சதவீதம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குமுக்கியத்துவம் உள்ள கதைகளை ரசிகர்களும் விரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர் சினிமாவா,குழந்தைகளா என்று கேட்டால் நான் கட்டாயம் குழந்தைகளைத் தான் சொல்லுவேன். என் பிள்ளைகளுக்கு பிறகு தான் எனக்கு எல்லாமே. சினிமாவும் முக்கியம் தான் என்றும் ஓபனாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement