• May 18 2024

சுந்தரியை கத்தியால் குத்த வந்த வில்லன்...பதறியடித்த அனு...பரபரப்பின் உச்சத்தில் சுந்தரி சீரியல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.கார்த்திக் இரண்டாவதாக அனு என்பவரைத் திருமணம் செய்திருக்கும் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. இருப்பினும் அனுவுக்கு கார்த்திக் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.

 கார்த்திக் பற்றிய அனைத்து உண்மைகளும் சுந்தரியின் ஆத்தாவுக்கு தெரிய வந்து விட்டதால் அவர் கார்த்திக் மீது சரியான கோபத்தில் இருக்கின்றார்.

இவ்வாறுஇருக்கையில் சுந்தரியின் வீட்டிற்கு அனுவின் தாயார் வரும் போது அப்பத்தா முன்நிலையில் பக்கத்திவீட்டு அக்கா கார்த்திக்கை பேசும் போது அப்பத்தா ஒரு மாதிரியாக அந்த அக்காவை பார்க்கின்றார்.இதனால் அப்பத்தவிற்கும் உண்மை தெரிந்துவிடுமோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதாவது இந்த உண்மை அப்பத்தா மற்றும் கார்த்திக்கின் மாமாவிற்கும் மட்டுமே இன்னமும் தெரியவில்லை.

இதன் பின் சுந்தரி கோர்டிற்கு செல்கின்றார்.அங்கு அனுவும் கார்த்திக்கும் வந்து நின்று லோயரோடு பேசிக்கொண்டு இருக்கும் போது சுந்தரியை கத்தியால் குத்த வில்லன் ஓடி வருகின்றார்.

இதைப்பார்க்காமல் நின்ற சுந்தரியை அனு காப்பத்தா முற்படுகின்றாள்.இதில் யாருக்கு கத்திகுத்து விழுந்தது.இல்லையெனில் யார் காப்பாற்றப்ட்டார் என பரபரப்புடன் ஒரு ப்ரமோ வெளிாகி உள்ளது.

Advertisement

Advertisement