• Sep 20 2024

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்த பிரபல நடிகர்- இதெல்லாம் தேவையா உங்களுக்கு?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது 40 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வருகிறார்.

நடிப்பதைத் தாண்டி இயக்குநராகவும் அரசியல்வாதியாகவும் ஈடுபட்டு வருகின்றார். இது தவிர பல சர்ச்சையான விடயங்களைப் பேசி வரும் இவர் ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரஹ்மானையே தனக்கு யாரென தெரியாது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். பாரத ரத்னா விருதெல்லாம் தனது தந்தையின் கால் தூசுக்கு சமம் என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் இந்துபூர் பகுதியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர் மன்ற தலைவர் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றார் பாலகிருஷ்ணா. அப்போது ரசிர்களும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். இதையடுத்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் பாலகிருஷ்ணா. அப்போது ரசிகர் ஒருவர் குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தை அசந்து அப்பாவின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. இதனைக் கவனித்த நந்தமுரி பாலகிருஷ்ணா அந்த குழந்தையை அடித்து எழுப்பி செல்பி எடுத்துக்கொண்டார்.

தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பி பாலகிருஷ்ணா செல்பி எடுத்தது தற்போது விவகாரமாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தைக்கு நீங்கள் யார் என்றே தெரியாது, அதனை அடித்து எழுப்பி செல்பி எடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குழந்தைகளிடமும் இப்படிதான் நடந்துகொள்வீர்களா என்றும் கேட்டு வருகின்றர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement