• Sep 20 2024

76 வது அகவையில் பாடு நிலா எஸ்.பி.பி-அவரை பற்றிய சில சுவாரஷியங்களை நினைவு கூறும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர் இந்திய சினிமாவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டியில் கடந்த 1946-ஆம் ஜூன் 4-இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு அரிகதை கலைஞர். இவருக்கு 2 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகள் என மிகப்பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.எஸ்.பி.பி.-இன் சகோதரர்களில் ஒருவர்தான் எஸ்.பி.சைலஜா, இவரும் பின்னணி பாடகிதான். இவர் தெலுங்கு மொழிகளில் 5000 க்கு மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்த எஸ்.பி இளம் வயதிலேயே பல்வேறு இசை கருவிகளை வாசித்து தேர்ச்சி பெற்றார். ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதில் கைதேர்ந்தவராக விளங்கினார். ஆனால் எஸ்.பி-இன் தந்தைக்கு இவரை இஞ்சினியராக்க வேண்டும் என்பதே ஆசை.

இதனால் பொறியியல் படிப்பதற்காக பிரபல பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து விலகி சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் எஞ்சினீயர்சில் இணைந்து பொருளியல் படிப்பை படித்தார்.

அந்த சமயத்தில் கல்லூரியில் நடந்த பல்வேறு இசைப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளார். எஸ்.பி.பி . இது தவிர மெல்லிசைக் குழு ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அந்த குழுவில் இளையராஜா மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். அவர்களோடு இணைந்து இசை நிகழ்ச்சிகளும், நாடகங்கள் மற்றும் கச்சேரிகளில் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

எஸ்.பி.பி. அதன் பின் சினிமாவில் பின்னணி பாடகனாக வேண்டும் என ஆசைப்பட்டார், சென்னையிலேயே தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துள்ளார். கடந்த 1966-இல் தெலுங்கு படம் ஒன்றின் மூலம் பாடகராக எஸ்.பி.பி அறிமுகமாகி இருக்கிறார். தமிழில் இவர் முதலில் பாடிய படம் ஹோட்டல் ரம்பா, இதில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எ.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து அவர் பாடியிருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இதன் பின்னர் ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்கிற படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளையகனி என்ற பாடலை பாடினார்.ஆனால் இந்த படம் ரிலீசாவதற்கு முன் எம்.ஜி.ஆர். நடித்த அடிமை பெண் படம் ரிலீசானது. அதில் அவர் பாடிய பாடல் தான் ஆயிரம் நிலவே வா. இந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் .

கடந்த 1960களில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.பி தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக இருந்து வந்துள்ளார். இதுவரை 16 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் இதனால் இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

பாடகராக மட்டுமன்றி தென்னிந்திய மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 45-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அத்தோடு டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி உள்ளார்.எஸ்.பி.பி. நடிகர் கமல் ஹாசன் தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட 120-க்கு மேற்பட்ட படங்களுக்கு இவர்தான் டப்பிங் பேசியுள்ளார்.

கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் திகதி பெங்களூரில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் கன்னட இசையமைப்பாளர்களான உபேந்திர குமாருக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். அதேபோல் தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், ஹிந்தியில் 6 மணிநேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார்.

இசையிலே ஆர்வம் கொண்ட பாலசுப்ரமணியம் சாவித்திரி என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல்லவி என்று ஒரு மகளும்,எஸ்.பி சரண் என்ற ஒரு மகனும் உள்ளனர். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.

இவ்வாறு எண்ணற்ற சாதனைகளை படைத்த எஸ்.பி.பி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்படு மரணமடைந்தார். அவர் இன்று நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், ஓவ்வொரு நாளும் தனது இனிமையான பாடல்களால் ரசிகர்களுடன் வாழ்ந்து வரும் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்களின் பிறந்தநாள் இன்று என்பதால் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement