• May 21 2024

படுத்துக் கொண்டே படத்தின் கதையை கேட்ட அஜித்... இயக்குநர் சொன்ன அந்த விஷயம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகின்ற ஒருவரே ராஜகுமாரன். தேவயானியின் கணவரான இவர் 'நீ வருவாய் என' என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகின்றார்.


ராஜகுமாரன் அவர்கள் தான் இயக்குவதற்காக இளம் வயதிலேயே எழுதிய ஒரு கதைதான் நீ வருவாய் என. முதலில் அஜித் மற்றும் விஜய் அந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இருவரிடமும் கதையை கூறியிருக்கிறார்.

விஜய் தன்னிடம் கால் சீட் இல்லை என்று கூறிவிட்டார். எனினும் பின்னர் "அஜித் நடிப்பதாக ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த கெஸ்ட் ரோலில் நான் நடிக்கிறேன், அஜித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கட்டும்" என்று விஜய் கூறினாராம். 


அதனை இயக்குநர் ராஜகுமாரன் அஜித்திடம் கூறியபோது, "நான் சிறப்பு தோற்றத்திலேயே நடிக்கிறேன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தால் மௌனராகம் திரைப்படத்தில் மோகனுக்கு ஏற்பட்ட நிலைதான் எனக்கும் ஏற்படும்" என்று கூறி அஜித் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர்தான் விஜய் கதாபாத்திரத்தில் பார்த்திபன் அந்த படத்தில் நடித்ததாக கூறப்படுகின்றது.


மேலும் அந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அஜித் மருத்துவமனையில் அட்மிட்டாகி இருந்ததால், முழு கதையையும் படுத்துக் கொண்டேதான் கேட்டாராம். ஒவ்வொரு காட்சியும் கூறக் கூற ஒன்ஸ் மோர் கேட்டு படுக்கையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்ததாகவும் கதை கேட்ட உடனே தான் நடிப்பதை உறுதி செய்ததாகவும் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். 


அதுமட்டுமல்லாது 'வாலி' படம் வெளியான போதுதான் அதன் படப்பிடிப்பில் 12 நாட்கள் கால் ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார் அஜித். இருப்பினும் படம் உருவான விதத்தை பார்த்து மேற்கொண்டு மேலும் ஒருநாள் கால் ஷீட் கொடுத்து நடித்தாராம்.

இதனால் "வேலை என்று வந்துவிட்டால் அஜித் 100 சதவீதம் தன்னுடைய உழைப்பை கொடுப்பார்" என்று ராஜகுமாரன் அவரை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement