பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 10 பெண் போடியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்த 20 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கலகலப்பாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக சண்டையும் ஆரம்பித்துள்ளன. இந்த சீசனில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை சேர்த்த பிரபல்யமாக ஜி.பி முத்து வலம் வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது ஜி. பி முத்துவுக்கும் தனலக்ஷ்மிக்கும் இடையில் பிரச்சினை கிளம்பியுள்ளது. ஏனென்றால் அவர் தனது வேலைகளை மட்டும் செய்யாது ஏனைய டீமுக்கும் சென்று உதவிகள் செய்து கொடுக்கின்றார்.இதனால் அவருடைய டீமில் இருக்கும் ஆயிஷாவும் தனலக்ஷ்மியும் கடுப்பாகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது இருவரும் பயங்கரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!