தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் கவிஞராகவும் இருந்து வருபவர் தான் சினேகன். இவர் சாமி சார்லி சாப்ளின் ,மெளனம் பேசியதே ,சொர்க்க தங்கம் ,தி லெஜண்ட் ,ஆடுகளம் ,மாப்பிள்ளை போன்ற இன்னும் பல படங்களில் பாடர் ஆசிரியராக பணிபுரிந்திருக்கின்றார்.
இது தவிர பிக்பாஸ் சீசன் 1 இலும் பலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றார்.அத்தோடு தனது நீண்ட நாள் காதலியான கனிகாவைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அண்மையில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் பணமோசடி புகார் மனு அளித்தார்.
சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதாவது 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார். இந்நிலையில், சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!