• Feb 23 2025

"ரானவ் வீட்டிற்குள் ப்ராங் பண்ணுறான்"பதிலடி கொடுத்த சேதுபதி..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகப்பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த ஷோவின் சீசன் 8 தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.மக்கள் செல்வன் கலந்து கொள்ளும் வார இறுதி எப்பிசோட்டிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு அந்தவகையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இவ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.


இதில் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க்கில் அனைவரும் விளையாடியிருந்தது குறித்து பேசப்பட்டுள்ளது.உங்களை நம்பாம நடிக்கிறது எண்டு சொன்னவங்க யார் ரானவ் என சேதுபதி கேட்க சவுண்டு  "அவன் தெரியணும்னு நிறைய பண்ணுவான் ஒருவேளை இப்புடி பண்ணி தெரிச்சுக்கலாமோ என பண்ணமாதிரி எனக்கு பீல் ஆச்சு சேர் "என சொன்னார் அதற்க்கு சேதுபதி "உண்மையா அடிபட்டிருந்தா சரி இல்லாட்டி கேவலமா நடிக்கிறான் என சொன்னிங்களே அது எப்புடி "என கேட்டார்.அதற்க்கு பார்வையாளர்கள் சிரித்தனர்.


ரானவ்க்கு பிராங் பண்ணுற ஒரு பழக்கம் இருக்கு என சொன்னார் அன்ஷிதா அதற்கு விஜய் சேதுபதி "பேசவர்றதனால என்ன வேணாலும் பேசலாம் அன்ஷிதா;ஏஞ்சல் ஒரு அளவு தான் இருக்கு எண்ட அந்த ஏஞ்சல் எங்க போச்சு இதுவே ஜெப்பிரினா எல்லாரும் வந்திருப்பாங்க ஆனா ரானவ்னா சந்தேகப்படுவாங்க" இவரது கேள்விக்கு அன்ஷிதா,முத்து,சவுண்டு ,ஜெப்பிரி ,விஷால் ஆகியோர் பதில் சொல்லாமல் முழித்தனர் பொறுத்திருந்து பார்க்கலாம் இன்றைய எபிசோட் எவ்வாறு அமையும் என்று..

Advertisement

Advertisement