கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி தற்பொழுது சின்னத்திரை நாயகனாக வளர்ந்து நிற்கும் பிரபலம் தான் ராஜு ஜெயமோகன். இதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியல் சிறந்ததொரு அடையாளத்தைக் கொடுத்தது.
இவ்வாறு இருக்கையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடித்து கொண்டு இருக்கும் நிலையிலே பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகவும் பங்கு கொண்டு தனது காமெடி நிறைந்த பேச்சுக்களால் ரசிகர்களைக் கவர்ந்ததோடு டைட்டில் வின்னரும் ஆனார்.
அதற்கு பிறகு அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் காத்திருக்கிறது என அப்போது செய்தி வந்தது. ஆனால் ராஜு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. மாறாக விஜய் டிவியின் 'ராஜு வூட்ல பார்ட்டி' என்ற ஷோவை நடத்த தொடங்கிவிட்டார் அவர்.
எனினும் சமீபத்தில் அந்த ஷோவுக்கு கெஸ்ட் ஆக வந்த நடிகர் மன்சூர் அலிகான் ராஜூவை கட்டிவைத்து அடித்தார். சினிமாவில் சாதிக்கச்சொன்னால் இப்படி இங்கேயே இருக்கிறாயே என அவர் மோசமாக திட்டினார்.
மன்சூர் அலிகான் திட்டிய பின்னர் ராஜு தனது மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
மன்சூர் திட்டியதால் தான் இப்படி விஜய் டிவி ஷோவுக்கு லீவு விட்டுவிட்டு ராஜு வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டாரோ என நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.
Listen News!