• Sep 20 2024

தந்தையை காணவில்லை பதறிப் போன கூல் சுரேஷ்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என  தெரிவித்துள்ளார் கூல் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ்.மேலும்  இவர் சாக்லேட், ஸ்,ரீ காக்க காக்க, அலை, ஆயுத எழுத்து, குசேலன், படிக்காதவன், கந்தகோட்டை, சிங்கம்புலி, காதல் பிசாசு, வெள்ளைக்கார துரை,  கிச்சு கிச்சு, மைடியர் லிசா உள்ளிட்ட  பல படங்களில் துணை வேடங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.. 

சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படம் அறிவிப்பு வெளியானது முதலில் படத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். அத்தோடு தான் எந்த பேட்டி அளித்தாலும் வெந்து தணிந்தது காடு என்றே துவங்குகிறார் கூல் சுரேஷ்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த கூல் சுரேஷ் படங்களை பார்த்து விமர்சனங்களை சொல்லி வருகின்றார். இதன் மூலம்  சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி விட்டார். 

படங்களில் இவருக்கு கிடைத்த புகழை விட சமூகவலைத்தளம்  தான் அதிக பிரபலத்தைகொடுத்தது.. சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் வெளியான பின்னர் இவர் குறித்த ஏகபோக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கண்ணீர் மல்க பேட்டி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.  அத்தோடு தான் சிம்புவின் உயிர் ரசிகர் என தெரிவித்து இருக்கிறார்.

இதன் பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கூல் சுரேஷை நேரில் சந்தித்து அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்ததோடு அவரது பிள்ளையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். 

இவ்வாறுஇருக்கையில்  புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ் அதில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை. தனது தந்தையை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என தெரிவித்துள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement