• Sep 20 2024

நடிகையின் வீட்டில் ரெய்டு:கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க கடந்த 2016ம் ஆண்டு தேர்வு நடந்தது. அந்த நியமனத்தில் ரூ. 100 கோடிக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.அத்தோடு அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தத் துவங்கியது

இந்நிலையில் மேற்கு வங்க மாநில தொழில் துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி ஊழில் செய்ததாக அவரை ஜூலை 23ம் தேதி காலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தார்கள்.

மேலும் பார்தா சாட்டர்ஜிக்கு நல்ல பழக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ. 21.2 கோடி ரொக்கம், ரூ. 79 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு மாடலாக தன் கெரியரை துவங்கியிருக்கிறார் அர்பிதா. அத்தோடு அவருக்கு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது . மேலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அர்பிதா தன் தந்தையின் மரணத்திற்கு பின்னர் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியவில்லை.

ஆறு ஒடிய மொழி படங்களில் நடித்திருக்கிறார் அர்பிதா.மேலும் பெங்காலி படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அத்தோடு 2012ம் ஆண்டுக்கு பின்னர் தெலுங்கு திரையுலகில் செட்டில் ஆகிவிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement