• May 14 2024

சூர்யாவுக்கு தேசிய விருது கிடைச்சது இப்படித்தானா- புதுக் காரணத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அதுகுறித்து பகீர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சூரரைப் போற்று.இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்ததோடு நடிகர் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக இந்த படம் உருவாக்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கும் விமான பயணத்தை சாத்தியமாக்க குறைந்த கட்டணத்தில் விமான பயணம் என்பதை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி இதுவரை 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றது.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் முக்கிய பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று டீமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, தேசிய திரைப்பட விருது குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் இடம்பெற்று இருந்ததாகவும். அவரால் தான் சூர்யாவுக்கு விருது கிடைத்தது என்பது போலும் பிஸ்மி என்பவர் பதிவிட்ட பதிவை குறிப்பிட்டு “மிஸ்டர் சூர்யா… உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதைப்பார்த்த நெட்டிசன்கள் ப்ளூ சட்டை மாறனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அந்த தங்கதுரை என்பவர் சூர்யா மட்டுமல்ல தமன்னா, இயக்குனர் ஷங்கர் போன்றவர்களுக்கும் தான் மேனேஜராக இருக்கிறார். அப்படி பார்த்தால் அவர்களுக்கும் தேசிய விருது கிடைச்சிருக்கனும்ல என பதிலடி கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement