• Jan 09 2026

கண்களால் இளசுகளைக் கவரும் பிரணிதா..!! இன்ஸ்டாவில் லீக்கான ஸ்டைலிஷ் போட்டோஸ்..!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நெடுங்கால அனுபவங்களை கொண்ட, அழகிய முகம் மற்றும் நற்பண்புகளால் பிரபலமான நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். 2009-ம் ஆண்டு வெளியான “உதயன்” திரைப்படம் மூலம் திரைப்பரப்பில் அறிமுகமான பிரணிதா, தனது நேர்த்தியான நடிப்பால் சிறந்த விமர்சனங்களை பெற்றார்.


இதனையடுத்து, 2012-ம் ஆண்டு வெளியான “சகுனி” திரைப்படத்தில் கார்த்திக்கு ஹீரோயினாக நடித்ததில் பிரணிதா ஒரு வலுவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு திறன் அவருக்கு புதிய இடத்தை உருவாகியிருந்தது. 


பிறகு, தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “மாஸ்” திரைப்படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்த இவர், கலையின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியதோடு, திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

பிரணிதா சுபாஷ் தனது கேரியரில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்தபோதும், திருமணம் செய்து கொண்ட பிறகு, திரைப்படங்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்தார். திரையுலகை விட்டு விலகியபோதும் அவரது ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. 


இன்றைய காலகட்டத்தில், நடிகைகள் மற்றும் நடிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவும் சீரியஸாகவும் செயல்படுவதால் ரசிகர்கள் அவர்களின் புது போஸ்ட்களை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணிதா சமீபத்தில் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement