• Nov 07 2025

பிரஜனின் வார்த்தையால் Nose Cut-ஆன பார்வதி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் சீசன்-9.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 9, தற்போதைய பரபரப்பான ரியாலிட்டி ஷோவாக, ரசிகர்களின் பெரிய ஆர்வத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் நட்பும் மோதலும் நிகழ்வுகளை உயிரூட்டுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகிய promo சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


promoவில், போட்டியாளர்கள் பார்வதி மற்றும் பிரஜன் இடையே நடந்த உரையாடல் வெளியாகியுள்ளது.  பார்வதி, பிரஜன் மேற்கொண்ட ஒரு செயலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கிறார். குறிப்பாக, பார்வதி கூறியதாவது, “நான் பிரஜனுடைய ஷோல்டர் மீது கை வைச்சேன், அப்ப பிரஜன் அதை தட்டிவிட்டார்....” என்றார். 


இதற்கு பிரஜன், “நான் ஒரு mind set-ல் இருக்கும் போது, நீங்கள் கை வைத்தால், நான் அப்புடிதான் செய்வேன்." என்று கூறியிருந்தார். இதைக் கேட்ட பார்வதி எனக்கு அது hurt ஆச்சு என்று சொல்ல.... பிரஜன் எனக்கும் நீங்க கை வைச்சது hurt ஆச்சு என்கிறார். இப்படியாக இரண்டு பேரும் வாக்குவாதம் செய்கிறார்கள். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement