• Feb 23 2025

''நோ கப் .. நோ மணி..'' பிரதீப் வெளியிட்ட புதிய போஸ்ட்! இப்போ என்ன தான் சொல்ல வராரு? சிக்கிய விவரகம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் முக்கிய போட்டியாளராக காணப்பட்டவர் தான் பிரதீப் ஆன்டனி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறி இருந்தாலும், இன்றளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் இன்று மட்டும் சமூக வலைத்தளங்களில் புகைந்து வருகின்றது.


இதற்கு காரணம் பிரதீப் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தான்.எனினும் இது கமல் முடிவு மட்டுமல்ல. பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்களின் முடிவும் தான்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார் பிரதீப் ஆன்டனி.

அதில், பிரதீப் ஆன்டனி தான் பிக் பாஸ் 7 இன் டைட்டில் வின்னர் என ரசிகர் ஒருவர் போட்ட பதிவை பகிந்து, ஆமா டைட்டில் வின்னர் தான்.. ஆனா காசும் இல்லை கப்பும் இல்லை என்பது போல குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement