• Sep 19 2024

சூர்யா 41 படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்து எடுத்து நடிப்பதில் முக்கியமானவர் தான் சூர்யா. இவரது இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்னும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கமலின் விக்ரம் படத்திலும் சின்ன ரோலில் நடித்திருக்கின்றார்.

இதனால் இப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் எவ்வாறாக இருக்கும் என்று ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இது தவிர சூர்யா இயக்குநர் பாலா இயக்கத்தில் தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் கன்னியகுமாரியில் நடந்தது

அதில் இருந்து சூர்யா பாதியிலேயே வெளியேறிவிட்டார் என தகவல் பரவியது.ஆனால் ஷூட்டிங் முடிந்துவிட்டதால் தான் சூர்யா கிளம்பினார் என குழுவினர் அறிவித்தனர். இருப்பினும் இந்த படம் மீண்டும் தொடங்க வாய்ப்பில்லை எனவும், கைவிடப்பட வாய்ப்பு அதிகம் எனவும் தகவல் பரவியது.

https://twitter.com/Suriya_offl/status/1529742532791238657

இந்நிலையில் சூர்யா இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு ஒரு ட்விட்டை போட்டிருக்கிறார். "Waiting to be back on sets" என குறிப்பிட்டு அவர் பாலா உடன் இருக்கும் போட்டோவை போட்டிருக்கிறார். அதனால் படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்பதை உறுதி செய்து இருக்கிறார் சூர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement