• Sep 20 2024

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா: எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார்.

எனினும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதம்பரியாக 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. மேலும் அதனை தொடர்ந்து சிலகாலம் அமைதி காத்த இருவரும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தினார்கள்.

அத்தோடு 6 ஆண்டுகள் காதலுக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் முடித்தார் நயன்தாரா. அண்மையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியானது. அத்தோடு திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடிக்கிறார். மேலம் அட்லி இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்திற்காக அவர் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து கதாநாயகியை மையப்படுத்தி தமிழில் உருவாகவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்காக ரூ. 10 கோடி வரை சம்பளம் நயன்தாராவுக்கு பேசப்பட்டதாகவும், இதனை அளிப்பதற்கு தயாரிப்பாளர் தரப்பில் சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவின் படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு ‘அன்னபூரணி’என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement