• May 21 2024

பிரச்சனையின் முதல் கட்டமாக வாய் திறந்த கோபி; ராதிகா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பரபரப்பாகவும் பல்வேறு திருப்பங்களுடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபியின் ரகசிய காதல் பற்றிய அனைத்து விடயங்களும் தெரிந்து விட்டது. அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

என்ன தான் கோபப்பட்டு வெளியே போயிருந்தாலும் திரும்பவும் இந்த வீட்டுக்கு வந்து தான் ஆகணும் கோபியோட சேர்ந்து வாழத்தான் செய்யணும். கோபியும் எல்லாத்தையும் மறந்துட்டு பாக்யாவோட சேர்ந்து வாழணும் என கூறுகிறார். அத்தோடு செழியனிடம் அவன் தனியா இருக்கான், அவனை கொஞ்சம் கவனிச்சுக்க என கூறுகிறார். ‌

அதன் பின்னர் செழியன் கோபியின் அருமை செல்ல கோபி கையெடுத்து கும்பிட்டு மன்னித்துவிடுடா என பேசுகிறார். எனக்குள்ள நிறைய ஆசை கொண்டிருந்தது வரப்போற மனைவி இப்படித்தான் இருக்கணும் என கனவு கண்டு இருந்தேன். ஆனால் அது எதுவுமே என்னுடைய வாழ்க்கையில் நடக்கல கட்டாயப்படுத்தி எல்லாத்தையும் நடத்தி வைத்துவிட்டார்கள்.

நான் ஒரு கோழை அப்போ இது எல்லாம் எதிர்த்து பேசி இருக்கணும். மேலும் இந்த இரண்டு வருஷமா தான் நான் என்ன பத்தி யோசிக்க ஆரம்பிச்சு இவ்வளவு பெரிய பிரச்சனையில் வந்து நின்று இருக்கிறேன்.

மேலும் நான் மத்தவங்களுக்காக மட்டுமே வாழ்ந்து இருக்கணும் அதுதான் என்னுடைய விதியின் ஏத்துக்கிட்டே இருக்கணும் எனக்கு தனிப்பட்ட ஆசைகள் இருந்திருக்க கூடாது அத பத்தி நான் யோசித்து இருக்க கூடாது என கோபி பேசுகிறார்.

இதன் பிறகு ஜெனி உள்ளே வந்து ஆன்ட்டி உங்க மேல அவ்வளவு அன்பா இருந்தாங்க. அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க கூட இருந்தா சந்தோஷமா இருப்பாங்க பாதுகாப்பா இருப்பாங்க உங்கள தவிர்த்து அவங்க எதையும் யோசித்தது கிடையாது. இதெல்லாம் அவங்களுக்கு பெரிய ஏமாற்றமா இருக்கு அதனாலதான் இப்படி எமோஷனலா கிளம்பி போய்ட்டாங்க என ஜெனி கூறுகிறார்.

இந்த பக்கம் ராதிகா மயூராவை ஒரு வழியாக பேசி சம்மதிக்க வைத்து ஊருக்கு கிளம்பும் நிலையில் இரவு நேரத்தில் ஒவ்வொரு முறையும் ராதிகா வீடு மாற்றிக் கொண்டே இருப்பதால் மயூ பேசியதை நினைத்து வருத்தப்படுகிறார். மேலும் இந்த பக்கம் கோபி செழியனிடம் எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் செல்வியுடன் ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யா நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க என சொல்ல ராதிகா தலைகுனிந்து நிற்கிறார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement