• Sep 20 2024

அடுத்த பயணமாக ஸ்பெயின் நாட்டில் உள்ள வேலன்சியா நகருக்கு சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்ததோடு கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டாகத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கெண்டனர்.

அத்தோடு இருவரும் ஹனிமூன் கொண்டாட முதலில் தாய்லாந்துக்குச் சென்றிருந்தனர்.அதனை அடுத்து நாடு திரும்பிய இவர்கள் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றனர்.


பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.பார்சிலோனா நகரில் உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


பயணத்தின் அடுத்த ஊராக ஸ்பெயின் நாட்டில் உள்ள வேலன்சியா நகருக்கு சென்றுள்ளனர். இது மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள கடற்கரை நகரமாகும். பார்சிலோனா நகரில் இருந்து இந்த வேலன்சியா நகருக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் ரயில் பயணம் மூலம் சென்றனர். ரஹ்மான் இசையமைத்த ஸ்வாதேஸ் பட பாடலுடன் ரயில் பயணம் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.



Advertisement

Advertisement