• Sep 04 2025

இளையராஜாவின் பாடல் தாய் பால் போல...!காப்பிரைட் விவகாரத்திற்கு மிஷ்கின் நெகிழ்ச்சி பதிவு..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

புதிய திரைப்படத்தின் காப்பிரைட் விவகாரத்தில் இயக்குநர் மிஷ்கின் அளித்த கருத்து தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இளையராஜா நமக்கு ஒரு தாய் மாதிரி. அவரின் பாடல்கள் நமக்கெல்லாம் தாய் பால் மாதிரி,” என்று தொடங்கும் அவரது உரை, இசை உரிமை மீதான விவாதத்திற்கு ஒரு உணர்ச்சி மிக்க கோணத்தை வழங்கியுள்ளது.


"ஏராளமான இசையமைப்பாளர்கள் இந்த காலத்தில் உள்ளனர். புதிதாக இசை அமைத்து பயன்படுத்தலாமே. ஆனால், ஏன் அவர் (இளையராஜா) பாட்டைத் தான் எடுக்க வேண்டும்?" என்ற கேள்வி எழுப்பியுள்ள மிஷ்கின், பழைய பாடல்களின் மீள்பயன்பாட்டை விட புதிய இசை உருவாக்கத்திற்குத் துணை நிற்பதையே முக்கியமாகக் கருதுகிறார்.

இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தும் இயக்குநர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் அவரது இசை மீதான காதலுக்கும் இடையே ஒரு வரம்பு இருக்க வேண்டும் என்றும், அதனை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.


காப்பிரைட் விவகாரத்தில், இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் சர்ச்சைகளில் இது மேலும் தீவிரம் பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இசை என்பது ஆன்மாவை தொடும் ஒன்று என்பதால், மரியாதையும், அனுமதியும் இரண்டும் முக்கியம் என்பது மிஷ்கினின் உறுதியான நிலைப்பாடாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement