• Oct 09 2025

தவெக கொடியை பயன்படுத்த தடை விதிக்க முடியாது...! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட தமது வணிக சின்னத்தைப் பயன்படுத்தியதாகத் தமிழகம் வெற்றிக் கழகம் (த.வெ.க.) மீது குற்றம்சாட்டிய தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


சபையின் நிறுவனர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கொடி வணிக சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதே நிறங்களில் த.வெ.க. பயன்படுத்தும் கொடி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, த.வெ.க.விற்கு அந்த நிறக் கூட்டணியை கொடியாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இரு தரப்புகளின் வாதங்களையும் கவனித்தார். கொடிகளை ஒப்பிட்டு பார்த்த நீதிபதி, த.வெ.க.வின் கொடி மனுதாரர் சபையின் கொடியுடன் ஒரே மாதிரியாக இல்லையெனவும், குழப்பம் ஏற்படும் வாய்ப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் சபையோ அல்லது த.வெ.க. வேறு எந்தவொரு வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என்பதால், வணிக சின்ன சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது எனக் கூறி, இடைக்கால தடை கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் மூலம், த.வெ.க. கட்சி தனது கொடியை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement