• May 20 2024

அந்தரங்க வீடியோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய காதலர் கைது- நடிகை தற்கொலையில் அதிரடி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை வைஷாலி தாக்கர் தற்கொலை வழக்கில் அவரது முன்னாள் காதலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களின் மனதில்  இடம் பிடித்தவர் வைஷாலி தாக்கர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த இவர், கடந்த 15ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்தோடு  அவரது அறையில் இருந்து 5 பக்க தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் அந்த கடிதத்தில் சில காலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் எழுதியிருந்தார் வைஷாலி.

வைஷாலிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்ற பல் மருத்துவருடன் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷாலி. ஆனால் அந்த திருமணம் திடீரென நின்றுவிட்டது. இதனால் தனது நிச்சயதார்த்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் வைஷாலி.

இவ்வாறுஇருக்கையில் , வைஷாலியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் காதலரான ராகுல் நவ்லானி மற்றும் அவரது மனைவி திஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைஷாலி வசித்த வீட்டின் பக்கத்திலேயே வசித்து வந்த ராகுல், வைஷாலி தற்கொலை செய்து கொண்டதுமே தலைமறைவானார்.எனினும் இதையடுத்த இந்தூரில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

தொழில் அதிபரான ராகுலும், நடிகை வைஷாலி தொடர்பில் இருந்துள்ளார்.இதன்  பின்னர் ராகுலை பிரிந்துள்ளார் வைஷாலி. ராகுலுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பிறகும் தொடர்ந்து வைஷாலியை துன்புறுத்தி வந்துள்ளார். அத்தோடு வைஷாலிக்கு திருமணம் நடைபெறாமலும் தடுத்து வந்துள்ளார். வைஷாலிக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்யும் போதெல்லாம் அவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்துள்ளார் ராகுல்.


அத்தோடு  வைஷாலி தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவருக்கு பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனாலேயே வைஷாலிக்கு திருமணம் தாமதமானதோடு அவரது பெயரும் கெட்டுள்ளது. இந்த மன உளைச்சல் மற்றும் ராகுல் கொடுத்த டார்ச்சர்தான் வைஷாலி வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வர காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


Advertisement

Advertisement