• May 11 2024

குழந்தைகள் இருக்கும் போது அப்படி செய்ய மாட்டேன்- வெளிப்படையாகப் பேசிய கவர்ச்சி நடிகை சன்னிலியோன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் புகழ் பெற்ற ஆபாச நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சன்னிலியோன்.கனடாவைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆபாச படங்களில் நடிப்பதைத் தவிர்த்து விட்டு பாலிவூட் படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்த சன்னி லியோனுக்கு தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தமிழில் வடகறி என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் போட்டிருந்தார். இதுதவிர தற்போது ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


இவர்  டேனியல் வைபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அதில் இரட்டை ஆண் குழந்தைகளை இத்தம்பதி வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டது. இதுதவிர நிஷா கவுர் என்கிற பெண் குழந்தையும் சன்னி லியோனுக்கு உள்ளது.


இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சன்னி லியோன் சொன்ன கருத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது ஷூட்டிங்கில் தான் கவர்ச்சியாக நடனமாடும் போது தனது குழந்தைகளோ அல்லது பிறரது குழந்தைகளோ அருகில் இருப்பதை விரும்பமாட்டேன் என்றும் அப்படி அவர்கள் இருந்தால் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவேன் எனவும் சன்னி லியோன் கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement