தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் , 'வாரிசு'. இந்த படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகின்றது.இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தமன் இசை அமைக்கும் இந்தப் படம் குடும்பக் கதையைக் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் சந்தித்த நிகழ்வு குறித்து காமெடி நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வாரிசு பட ஷூட்டிங்கில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும் போது அதிக உத்வேகம். 15 நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஜய் இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கப் போகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!