கார்த்தி என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் என பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
மேலும் இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள் போன்ற பல விருதுகள் வென்றார். மேலும் மணிரத்னம் இயக்கிய பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் கவரப்பட்டார்.
மேலும் இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். மேலும் இவருக்கு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனி என்பவருடன் சூலை 2011 அன்று கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது. இவருக்கு உமையாள் என்ற ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் வெளிவந்த முதல் நாளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப் படம் இதுவரை சுமார் ரூ. 57 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.
Listen News!