• Apr 24 2024

மீண்டும் போலீஸ் பயிற்சியில் களமிறங்கும் சந்தியா- அர்ச்சனாவைத் திட்டித் தீர்த்த செந்தில்- ராஜா ராணி சீரியல் எப்பிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்டையே பார்த்துக் கொண்டிருக்க சரவணன் சந்தியாவிடம் சென்று கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் இங்கதானே வர போறோம், கவலைப்படாதீங்க என சொல்லி சந்தியாவை காருக்கு அழைத்துச் செல்ல அப்போது ஜோதி ஓடி வந்து நீ கர்ப்பமாக இல்லை அது ஃபால்ஸ் பிரகண்சி என சொல்ல சரவணன் சந்தோஷப்படுகிறார்.


நீங்க கவலைப்படாம போய் பிராக்டிஸ் தொடருங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என சொல்ல சிவகாமியின் முகம் மாறியதை பார்த்து சந்தியா மன்னிப்பு கேட்கிறார்.அது எல்லாம் நெனச்சு நீ கவலைப்படாத இதையெல்லாம் முடிச்சிட்டு வந்து நீ குழந்தை பெற்றுக் கொடுத்துதான் போற என சரவணன் அப்பா ஆறுதல் கூறுகிறார்.

இந்த பக்கம் அர்ச்சனா நீ வந்த நேரம் நல்ல நேரம் நீ அதிர்ஷ்டக்கார பையன் போல எல்லாம் நல்லதாகவே நடக்கும் என சந்தியா போலீஸ் ஆக முடியாது நினைத்து சந்தோஷப்பட அப்போது வரும் செந்தில் அர்ச்சனாவை திட்டி தீர்க்கிறார்.அடுத்து சந்தியா கௌரி மேடம் சென்று பேச அவர் உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது நீ போய் ஊர்ல மாமியாருக்கு நல்ல மருமகளா இருக்க சொல்ல சந்தியா ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க என கெஞ்சி கேட்க கௌரி மேடம் முடியாது என சொல்லிவிட்டு சென்றுவிட இதை சரவணன் பார்த்துவிட்டு பிறகு மேடமிடம் சந்தியாவுக்காக வாய்ப்பு கேட்டு பேசுகிறார். 


சந்தியா தீவிரவாதிகளை பிடித்த விஷயத்தை பற்றி எல்லாம் சொல்லி வாய்ப்பு கேட்க பிறகு கௌரி மேடம் சரி என்னமோ பண்ணுங்க என சொல்லிவிட்டு செல்ல மீண்டும் சந்தியா பயிற்சியை தொடரும் வாய்ப்பு கிடைக்கிறது.மேலும் சரவணன் சந்தியாவிடம் கௌரி மேடம் ஐ பார்த்து பேசியதாகவும் திரும்பவும் பயிற்சி பெற சொன்னதாகவும் கூறுகிறார். உங்களை உதாசீனமாக பேசியவர்களுக்கு நீங்கள் சாதித்து காட்ட வேண்டும் என சந்தியாவுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement